சென்னை, நாகை இடையே ஒரே தொலைவில் கஜா

சென்னை, நாகை இடையே ஒரே தொலைவில் கஜா

சென்னை, நாகை இடையே ஒரே தொலைவில் கஜா
Published on

சென்னை நாகை இடையே ஒரே தொலைவில் கஜா மையம் கொண்டிருப்பதாகவும் மணிக்கு 8 கி.மீட்டரிலிருந்து 14 கி.மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கஜா புயல் இன்று மாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இன்று மாலை அல்லது இரவு புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும் நாகைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டிருப்பதாகவும் 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பாம்பன் - கடலூர் இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கும் எனவும் தற்போது, மணிக்கு 8 கி.மீட்டரிலிருந்து 14 கி.மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 

கஜா புயல் நெருங்குவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. அடையாறு, மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com