தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாகவும், காற்று உந்துதல் குறைந்ததால், அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, மதுரை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் கடலோரப் பகுதிகளுக்கு வரும் 27 ஆம்தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 29ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com