டிச.5 முதல் 7 வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை மையம்

டிச.5 முதல் 7 வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை மையம்

டிச.5 முதல் 7 வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை மையம்
Published on

டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “ தமிழகத்தில் 13 இடங்களில் கனமழை முதல் மிக
கனமழை பெய்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோர பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர வாய்ப்புள்ளது. வலுவான குறைந்த
காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். எனவே டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆழ்கடலுக்கு
மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிப்புக்காக கடலுக்கு சென்ற நிலையில், ஒகி புயலால் அவர்கள் கரை
திரும்பவில்லை என உறவினர்கள் கூறி வருகின்றனர். கடலில் காணாமல் போன மீனவர்களை தேடுவதற்காக கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை
அதிகரிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை கடலுக்கு
செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com