சென்னை: குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் பரிசு; பிரத்யேக தொலைபேசி எண் அறிமுகம்

சென்னை: குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் பரிசு; பிரத்யேக தொலைபேசி எண் அறிமுகம்
சென்னை: குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் பரிசு; பிரத்யேக தொலைபேசி எண் அறிமுகம்

குற்றவாளிகள் மற்றும் குற்ற செயல்கள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்படும் என அம்பத்தூர் காவல் துணைஆணையர் தீபா சத்தியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி சென்னை காவல் ஆணையர் வழிகாட்டுதல்படி அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி, பருதிப்பட்டு படகு குளாமுக்கு வந்திருந்த பொதுமக்களை அம்பத்தூர் காவல் துணைஆணையர் தீபா சத்தியன சந்தித்தார்.

அப்போது ஆவடியில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அல்லது சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவோர் குறித்து நேரடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பிரத்யேகமாக '9176427100' என்ற அலைபேசி எண்ணை அறிமுகம் செய்து அதுகுறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச் செயல்கள், குற்றவாளிகள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்.மேலும் அவர்களது ரகசியம் காக்கப்படும் என உறுதியளித்தார். மக்கள் பயமின்றி காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com