அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி

அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி

அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் போராடியவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியக்கூடாது எனவும் தடியடி நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு முன் அவசர வழக்காக வந்தது.

அப்போது வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 19ஆம் தேதி வரை மாணவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டதாக கூறினார்.

அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். மேலும், போராடியவர்கள் மீது எவ்விதவழக்கும் பதியக்கூடாது என்று போலீசுக்கு உத்தரவிட முடியாது எனவும் நீதிபதி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com