மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தாழ்ந்தது அல்ல - உயர் நீதிமன்றம்

மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தாழ்ந்தது அல்ல - உயர் நீதிமன்றம்
மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தாழ்ந்தது அல்ல - உயர் நீதிமன்றம்

பார்வை மாற்றுத்தினாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவில், மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தாழ்ந்தது இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணை சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில், சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில், அன்புச்செல்வன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, சராசரியான மனிதனின் சாட்சியத்தைவிட மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தரம் தாழ்ந்ததாக கருத முடியாது என தெரிவித்துள்ளார்.

எனவே, ஆட்டோ ஓட்டுநர் அனுபுச்செல்வனுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையில், ஒருநாள் கூட குறைப்பதற்கு விரும்பவில்லை எனக் கூறி, அதை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com