அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்றுவந்த மாணவர்கள் தற்போது சாப்பாடு விஷயத்தில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலரெல்லாம் பிறரிடம் உணவு பிட்சை கேட்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கும் சில பெற்றோர், பொருளாதார பாதிப்பு காரணமாக விற்று விடுகின்றனர்” என வாதத்தின்போது கூறியிருந்தார். பிரச்னைகளை சரிசெய்ய அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து, அவற்றின் மூலம் மாணவர்களுக்கு கொரோனா சூழலிலும் சத்துணவை சமைக்கப்பட்ட உணவாக அரசு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என யோசனை தெரிவித்தார்.