புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுச்சேரியில் 3  பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனிடையே புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பாரதிய ஜனதா பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்ஏ.க்களாக நியமித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆனால் நியமன எம்எல்ஏக்களாக பாஜகவின் மூவர் நியமனத்தை நிராகரித்து சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார். மேலும் அவர்களை சட்டப்பேரவைக்குள் அவர்களை நுழையவும் தடை விதித்தார். இதனிடைய ஆளுநர் நியமனத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேசமயம் சட்டப்பேரவைக்குள் நுழைய தடை விதித்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி 3 நியமன எம்எல்ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநயாகரின் தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரின் நியமனம் செல்லும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com