சென்னை வர்த்தக மையத்திற்கு மாற்றப்படும் கொரோனா நோயாளிகள்

சென்னை வர்த்தக மையத்திற்கு மாற்றப்படும் கொரோனா நோயாளிகள்
சென்னை வர்த்தக மையத்திற்கு மாற்றப்படும் கொரோனா நோயாளிகள்

சென்னை வர்த்தக மையத்தில் 500 படுக்கைகள் தயாராக உள்ளதால் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் உறுதியாகும் கொரோனா நோயாளிகள் அங்கு மாற்றப்படவுள்ளார்கள்.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகத்தில் அதிகரித்த வண்ணமே உள்ளது. சென்னையில் இதுவரை 1257 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கை வசதிகளை சென்னை மாநகராட்சி உருவாக்கி வருகிறது. இதற்காக திருமண மண்டபங்கள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்ட பல இடங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க படுக்கைகள் தயார் செய்யப்பட்டன.

தற்போது அங்கு 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதனால் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் உறுதி செய்யப்படும் கொரோனா நோயாளிகள் இனி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com