சென்னை: சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள் - எச்சரித்து அனுப்பிய போலீசார்

சென்னை: சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள் - எச்சரித்து அனுப்பிய போலீசார்
சென்னை: சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள் - எச்சரித்து அனுப்பிய போலீசார்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகள் சாலையில் குடுமி சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் சிலர், கல்லூரி முடிந்து பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது இரு மாணவிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அது முற்றி கைகலப்பாக மாறி குடுமி சண்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த சக கல்லூரி மாணவ - மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவிகளுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com