எழும்பூர் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு போடுவதாக தற்கொலை முயற்சி

எழும்பூர் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு போடுவதாக தற்கொலை முயற்சி
எழும்பூர் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு போடுவதாக தற்கொலை முயற்சி

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு எழும்பூர் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு போடுவதாகக் கூறி மூன்று பேர்; தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் முதல் நுழைவாயில் முன்பு நேற்றிரவு குடிபோதையில் வந்த மூன்று நபர்கள் தங்கள் கைகள் மற்றும் உடலில் பிளேடால் அறுத்துக் கொண்டும் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூச்சலிட்டுள்ளனர்.

பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவலர்கள் உடனே அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி வேப்பேரி காவல் ஆய்வாளர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், எழும்பூர் காவல் நிலையம் அருகில் பிளாட்பாரத்தில் வசித்துவரும் ஆல்பர்ட் (30), தினேஷ்குமார் (22), சஞ்சய் (19), சிவரஞ்சனி (25), ரேணுகா (55) ஆகியோர் என தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் எழும்பூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவர் தங்கள் மீது தேவை இல்லாமல் வழக்குப்பதிவு செய்வேன் எனக்கூறி மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளனர். பின்னர் பிளேடால் அறுத்துக்கொண்ட மூன்று பேரையும் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் சிறிது நேரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com