தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் வரக்கூடாது: விரைவில் அறிவிப்பு?

தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் வரக்கூடாது: விரைவில் அறிவிப்பு?

தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் வரக்கூடாது: விரைவில் அறிவிப்பு?
Published on

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வியாபாரிகள் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடாது என விரைவில் அறிவிக்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் உள்ளிட்டோர் ஆய்வு நடத்திய பின்னர் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். இதையடுத்து மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காததால் கடந்த மே மாதத்தில் மட்டும் 11 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் கடைகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சிஎம்டிஏ நிர்வாக செயலாளார் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர், மார்க்கெட்டில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை என புகார்கள் வந்துள்ளதாகவும், நோய் தடுப்பு விதிகளை பின்பற்றாத கடைகள் சில நாட்கள் மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com