தீபாவளி அன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி

தீபாவளி அன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி
தீபாவளி அன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீபாவளி அன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு வரும் 4தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள அதே நாளில் மகாவீரர் ஜெயந்தி நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சி கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்தும் தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com