சென்னை: பிரபல உணவகத்தின் பிரியாணியில் கரப்பான் பூச்சி – 3 நாட்களுக்கு கடையை மூட உத்தரவு

சென்னை: பிரபல உணவகத்தின் பிரியாணியில் கரப்பான் பூச்சி – 3 நாட்களுக்கு கடையை மூட உத்தரவு
சென்னை: பிரபல உணவகத்தின் பிரியாணியில் கரப்பான் பூச்சி – 3 நாட்களுக்கு கடையை மூட உத்தரவு

பிரபல உணவக பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, 3 நாட்களுக்கு உணவத்தை மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவிட்டார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள புஹாரி உணவகத்திற்கு உணவருந்த வந்த தம்பதிகள் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அதில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி சுகுமார் உணவகத்தில் சோதனை மேற்கொண்டார். அப்போது சமையலறையில், விதிமுறைகள் எதுவும் பின்பற்றாமல், அசுத்தமான முறையில் உணவு சமைக்கப்படுவதையும், சமைக்கும் பகுதியில் கரப்பான் பூச்சி சுற்றித்திரிந்ததையும் பார்த்துள்ளார்.

இதையடுத்து புகாரின் அடிப்படையில் 3 நாள் உணவகத்தை மூட உத்தரவிட்டார். மேலும் உணவகத்தில் எழுந்த புகாரை மூன்று நாட்களுக்குள் சரிசெய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் உறுதி செய்த பிறகே உணவகத்தை திறக்க வேண்டும் என உத்தரவிட்டு 5000 ரூபாய் அபாரம் விதித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com