"என் புள்ள போயிருச்சு; கொன்னுட்டீங்களே” - கை அகற்றப்பட்ட குழந்தை மரணம்; கண்ணீர்விட்டு அழுத தாய்!

தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டதாக கூறப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதியின் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
குழந்தை உயிரிழப்பு
குழந்தை உயிரிழப்புகோப்பு புகைப்படம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சிய போக்கால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக தனது ஒன்றரை வயது குழந்தை கையை இழந்ததாகவும் பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைக்கு அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

பெற்றோர்களின் குற்றச்சாட்டு எதிரொலியாக அரசு சார்பில் விசாரணை குழு நடத்திய விசாரணையில், குழந்தைக்கு தவறான சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதன் தாயார், மருத்துவர்களின் தவறு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும், குழந்தையின் சிகிச்சை பற்றி கேட்டபோது மருத்துவர்கள் கேலி செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com