சென்னை: தலையில் சிக்கிய பாத்திரம்... பத்திரமாக குழந்தையை மீட்ட தீயணைப்புத்துறை!

சென்னை குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்திரத்தை அகற்றிய தீயணைப்புத் துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
child rescued
child rescuedpt desk

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை போரூர் மங்களா நகர் 16வது தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திக் - ஆனந்தி தம்பதியினர். இவர்களது ஒன்றரை வயது மகன் கிருத்திக், வழக்கம் போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டின் சமையலறையில் இருந்த பாத்திரத்தை தலையில் வைத்து விளையாண்ட போது அந்த பாத்திரம் எதிர்பாராத விதமாக குழந்தையின் தலையில் சிக்கிக் கொண்டது.

child rescued
child rescuedpt desk

நீண்ட நேரம் போராடியும் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை எடுக்க முடியாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவித்து வந்துள்ளனர். இதையடுத்து மதுரவாயல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

child rescued
ELECTION BREAKING: BJPயில் இணைந்த EX Cong MPக்கு உடனே சீட் To பாஜகவில் கங்கனா வேட்பாளராக அறிவிப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை ராட்சத கத்திரி கொண்டு லாவகமாக வெட்டியெடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

குழந்தையை மீட்ட தீயணைப்புத்துறையினர்
குழந்தையை மீட்ட தீயணைப்புத்துறையினர்

இதையடுத்து குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை லாவகமாக அகற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com