இதனை அறிந்த வடமாநில சைபர் கொள்ளையர்கள் திருடிய பணத்தை ஆன்லைன் மூலம் அந்தந்த மாநில மின்வாரியத்தில் மின்கட்டணமாக செலுத்தி தரகர்கள் மூலம் ரொக்கமாக பெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சென்னை காவல்துறை கூறியுள்ளது. பணத்தை இழந்தவர்கள் புகார் அளித்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தபின்னரே வங்கி நிர்வாகம் கொள்ளையடித்த பணத்தை முடக்குவதாகவும், இதற்கு ஏற்படும் காலதாமதத்தை சைபர் கொள்ளையர்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்நிலை காவல் அதிகாரி கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினாலே, வங்கிகள் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கிக்கு அக்கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளது.