காணாமல்போன தொழிலதிபர் - கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி

காணாமல்போன தொழிலதிபர் - கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி
காணாமல்போன தொழிலதிபர் - கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி

சென்னை நெற்குன்றம் சின்மயா நகர் பகுதியில் தொழிலதிபரை கொலை செய்து கால்வாய் வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை சின்மயா நகர் கால்வாயில் பலீதீன் கவரில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மிதப்பதாக அந்த பகுதியில் துப்பரவு பணியில் ஈடுப்பட்டிருந்தவர்கள் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் போலீசார், கருப்பு நிற பாலீதீன் கவரில் சுற்றி கட்டப்பட்டு இருந்த சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (62) என்பது தெரியவந்தது. தொழிலதிபரான இவரது தொலைப்பேசி நேற்றிரவில் இருந்து அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வாயில் துணி வைத்து கை, கால்கள் கட்டப்பட்டு ரத்தக்கரையோடு அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றிரவு அவரது ஏடிஎம் கார்டு மூலம்இரண்டு முறை தலா ரூ.10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.கொலை நடைபெற்றுள்ள இடத்திற்கு அருகே அவரது கார் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? ஆல்லது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் யாரேனும் கடத்தி கொலை செய்யதார்களா என்ற கோணத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்றிரவு தொழிலதிபரின் மகன் கார்த்திக் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com