சென்னை: 19 கிலோமீட்டர் தூரத்தை 6.14 மணி நேரத்தில் நீந்தி உலக சாதனை படைத்த 8 வயது சிறுமி

சென்னை: 19 கிலோமீட்டர் தூரத்தை 6.14 மணி நேரத்தில் நீந்தி உலக சாதனை படைத்த 8 வயது சிறுமி
சென்னை: 19 கிலோமீட்டர் தூரத்தை 6.14 மணி நேரத்தில் நீந்தி உலக சாதனை படைத்த 8 வயது சிறுமி

கடலில் நீச்சல் அடித்து 19 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி உலக சாதனை படைத்தார்.

சென்னை பழைய மகாபலிபுர சாலை, காரப்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் தருண்ஶ்ரீ தம்பதியினரின் 8 வயது மகள் தாரகை ஆராதனா. இவர், கடலில் பிளாஸ்டிக் கழிவுகளால் பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கோவளம் கரிகாட்டுக் குப்பம் முதல் நீலாங்ரை வரை உள்ள 19 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இந்த தூரத்தை 6 மணிநேரம், 14 நிமிடங்களில் நீந்தி வந்த சாதனையை அசிஸ்ட் வோல்டு ரெக்கார்டு என்ற உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. சான்றிதழை விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார். 2ஆம் வகுப்பில் படிக்கும் இந்த சிறுமி, கடந்த 3 வருடங்களாக கடும் பயிற்சி எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடலிலும், கடற்கரையிலும் அதிகப்படியாக இருந்த 600 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வைத்துள்ள இவர், அதை விற்று கிடைக்கும் பணத்தை முதல்வர் ஸ்டாலின் தாத்தாவிடம் பிளாஸ்டிக்கை ஒழிக்க வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com