சென்னை: திடீரென தீப்பற்றி எரிந்த போக்குவரத்து சிக்னல்

சென்னை: திடீரென தீப்பற்றி எரிந்த போக்குவரத்து சிக்னல்
சென்னை: திடீரென தீப்பற்றி எரிந்த போக்குவரத்து சிக்னல்

சென்னை அண்ணாசாலையில் திடீரென போக்குவரத்து சிக்னல் தீப்பற்றி எரிந்தது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் நேற்றிரவு தீடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராய நகர் அருகே உள்ள எஸ்ஐடி காலனி முதல் மெயின் ரோடு மற்றும் அண்ணா சாலை இணைப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்து சிக்னலில் தொடர் கனமழை காரணமாக திடீரென நேற்று இரவு தீ பிடித்து எரிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

சிக்னலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிக்னல் முழுவதும் செயலற்றுப் போனது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com