சென்னையில் இன்று மருத்துவர் உள்பட 11 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

சென்னையில் இன்று மருத்துவர் உள்பட 11 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

சென்னையில் இன்று மருத்துவர் உள்பட 11 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !
Published on

சென்னையில் இன்று ஒரு மருத்துவர் உள்பட 11 பேர் கொரோனாவுக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசுப் பொது மருத்துவமனையில் 2 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேர், ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் 2 பேர், ரயில்வே மருத்துவமனையில் ஒருவர், அப்போலோ வானகரம் மற்றும் ஆயிரம் விளக்கு மருத்துவமனையில் தலா ஒருவர் என 10 பேர் கொரோனா வைரஸ் சிகிச்சை பலன் தராமல் உயிரிழந்தனர்.

மேலும் வானகரம் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதன் காரணமாக இன்று மட்டும் இதுவரை சென்னையில் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியாகி இருக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் நேற்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்திருந்தனர். தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பால் 105 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com