சென்னை: புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் குறைவான நேரத்தில் பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை: புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் குறைவான நேரத்தில் பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை: புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் குறைவான நேரத்தில் பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல், கூட்ட நெரிசல் குறைவான நேரத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

கொரோனா காலத்தை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில், வழக்கமான ரயில்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. அதேசமயம் ரயில்வே ஊழியர்கள், வங்கி, காப்பீடு, பொதுத் துறைநிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக குறிப்பிட்ட ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் கூட்டம் அதிகமாக காணப்படும் காலை 7 முதல் காலை 9.30 வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. அதேபோல முகக்கவசம் அணியாமல் யாரும் ரயில்வே நிலையங்களுக்கு வரக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com