ஓங்கூர் ஆற்றின் குறுக்கே பாலம் பழுது: சென்னை - திருச்சி போக்குவரத்து மாற்றம்

ஓங்கூர் ஆற்றின் குறுக்கே பாலம் பழுது: சென்னை - திருச்சி போக்குவரத்து மாற்றம்
ஓங்கூர் ஆற்றின் குறுக்கே பாலம் பழுது: சென்னை - திருச்சி போக்குவரத்து மாற்றம்

ஓங்கூர் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் பழுதடைந்துள்ளதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழி பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றின் குறுக்கே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லக்கூடிய போக்குவரத்துக்கு முக்கிய பாலங்கள் ஆகும். இதில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வரக்கூடிய பாலம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளிடமிருந்து தொடர்ந்து புகார் வந்தவண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று முதல் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியானது 10 நாட்களுக்கு மேலாக நடைபெறும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் மற்றொரு பாலத்தில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு, அந்த பாலத்தின் வழியாக தற்போது வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com