போலி நகைகளை வைத்து ரூ.27.92 லட்சம் மோசடி: 4 பேர் தலைமறைவு

போலி நகைகளை வைத்து ரூ.27.92 லட்சம் மோசடி: 4 பேர் தலைமறைவு
போலி நகைகளை வைத்து ரூ.27.92 லட்சம் மோசடி: 4 பேர் தலைமறைவு

ஆம்பூரில் போலி நகைகளைக் கொடுத்து 27 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் உட்பட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். 

ஆம்பூரிலுள்ள மகாராஷ்டிரா வங்கி கிளையில் நகை மதிப்பீட்ட‌ளராக சதீஷ் என்பவர் 2014ஆம் ஆண்டுமுதல் 2016ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்துள்ளார். அப்போது, போலி நகைகளைக் பெற்று கொண்டு சக்திவேல் என்பவருக்கு11 லட்சத்து 65ஆயிரம் ரூபாயும், சரவணன் என்பவருக்கு 5லட்சத்து 30ஆயிரம் ரூபாயும், அப்துல்மாலிக் என்பவருக்கு 11 லட்சத்து 23ஆயிரம் ரூபாயும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 

கடனைத் திருப்பி செலுத்தாததால், நகைகளை ஏலம் விடும் போது அவை போலியானவை என தெரியவந்தது. அது குறித்து புகார் அளிக்கப்பட்டு, விச‌ரணை நடைபெற்று வரும் நிலையில், நகைமதிப்பீட்டாளர் சதீஷ் உட்பட 4 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com