8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த மாவட்டங்களின் விவரம்
தேவலா (நீலகிரி) 12 செ.மீ,
ஏற்காடு (சேலம்) 10 செ.மீ,
வால்பாறை (கோவை) 9 செ.மீ,
சின்னக்கல்லார் (கோவை) 8 செ.மீ,
சின்கோனா (கோவை) 7 செ.மீ,
பந்தலூர் (நீலகிரி) 7 செ.மீ,
ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) 5 செ.மீ,
சோலையார் (கோவை) 5 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆகஸ்ட் 10: கேரளா- கர்நாடகா, கோவா கடலோர பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 11: கேரளா- கர்நாடகா, கோவா கடலோர பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட்12 : தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.