அதிமுகவில் பிரச்னை நீடிப்பதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பிருப்பதாக தமிழகத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், அதிமுகவின் பொதுச்செயலாளர் நியமனம் குறித்த முடிவினையே தேர்தல் ஆணையம் முதலில் அறிவிக்கும் என்று அவர் கூறினார். இருதரப்பினர் இடையே பிரச்னை இருப்பதால் கடந்த 1987ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதுபோல தற்போதும் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.