டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடக்கு கேரளா, அதையொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரி 24 முதல் 26ஆம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 24 மணிநேரத்தில் கடலூரில் 12 செ.மீ, திருத்தணி, சிவகிரியில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது