வரும் மார்ச் 13-ஆம் தேதி வரை தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக, தென் தமிழகத்தில் ஆங்கேங்கே லேசான மழை பெய்து வருகிறது. மணிமுத்தாறு மற்றும் பாபநாசத்தில் தலா 2 செ.மீ மழையும், பேச்சிப்பாறை மற்றும் நாகர்கோவிலில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.