‘கடலூர், விழுப்புரம் உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

நாளையும் நாளை மறுநாளும் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
heavy rain
heavy rainpt desk

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

heavy rain
heavy rainpt desk

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் நாளையும் நாளை மறு நாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

heavy rain
தீபாவளி கொண்டாட்டம் - பல்வேறு இடங்களில் அனுமதியளித்த நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடித்த மக்கள்

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com