தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை

தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை

தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென்  தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனத்தின் காரணமாகவும் அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வேலூர், காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 
மாலை அல்லது இரவு மழை பெய்யும்” எனத் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, தாமரைப்பாக்கத்தில் 10 செமீ
 மழையும், போளூரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com