\
என்ன பிப்.30ம் தேதி இறந்தாரா? - ‘ஷாக்’ கொடுத்த வாரிசு சான்றிதழ்

என்ன பிப்.30ம் தேதி இறந்தாரா? - ‘ஷாக்’ கொடுத்த வாரிசு சான்றிதழ்

என்ன பிப்.30ம் தேதி இறந்தாரா? - ‘ஷாக்’ கொடுத்த வாரிசு சான்றிதழ்
Published on

உலகிலேயே இல்லாத, பிப்ரவரி 30 ஆம் தேதியை குறிப்பிட்டு ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம், வாரிசு சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலராஜகுலராமன் ஊராட்சி வேயம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி 2000 ஆம் ஆண்டில் உயிரிழந்தார். இவர் பிப்ரவரி 30 ஆம் தேதி உயிரிழந்ததாக ஊராட்சி, சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்கள் இவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com