“அபராதம் அதிகரிப்பால் விபத்துகள் குறைந்துள்ளன” - நிதின் கட்கரி

“அபராதம் அதிகரிப்பால் விபத்துகள் குறைந்துள்ளன” - நிதின் கட்கரி
“அபராதம் அதிகரிப்பால் விபத்துகள் குறைந்துள்ளன” - நிதின் கட்கரி

மோட்டார் வாகன அபராதம் அதிகரிப்பால் விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மோட்டார் வாகன விதிமீறல் அபராதங்களை கடுமையாக்கிய பின்னர் புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் சாலை விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளன. இத்தகவலை சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். 

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதுச்சேரியில் 31% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார். சண்டிகரில் 75%, உத்தராகண்டில் 22%, குஜராத்தில் 14%, பீகாரில் 10.5%, கேரளாவில் 2.1% விபத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com