செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு நிதியைக் குறைத்த மத்திய அரசு?

செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு நிதியைக் குறைத்த மத்திய அரசு?

செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு நிதியைக் குறைத்த மத்திய அரசு?
Published on

செம்மொழி தமிழாய்வு மையத்துக்கான நிதியை மத்திய அரசு பாதிக்கும் கீழாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2015-16ஆம் நிதியாண்டில் செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு அதிகபட்சமாக 11 கோடியே 99 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 2016-17ஆம் நிதியாண்டில் 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு 3 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், 2008-09ஆம் ஆண்டில் இருந்து செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு ஒதுக்கப்பட்ட 79 கோடி ரூபாயில் 9 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாததும் தெரிய வந்துள்ளது. தமிழாய்வு மையத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கி வருவதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாகவும் மையத்தின் துணைத் தலைவர் பிரகாசம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com