தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அணுசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள், தேனி பகுதியை சேர்ந்தவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அணுசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்தியாவிலேயே முதன்முறையாக தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இதனிடையே நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுப்புற சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, 2 கி.மீ. தொலைவுக்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com