புழல் சிறையில் 5 செல்போன்கள் பறிமுதல் - கைதிகளிடம் விசாரணை

புழல் சிறையில் 5 செல்போன்கள் பறிமுதல் - கைதிகளிடம் விசாரணை

புழல் சிறையில் 5 செல்போன்கள் பறிமுதல் - கைதிகளிடம் விசாரணை
Published on


சென்னை புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்திவந்த 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவு அறைகளில் நடத்தப்பட்ட சோதனையில் கைதிகள் சுரேஷ், பாலசந்தர், மணிவண்ணன், கணேசன் ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 5 செல்போன்கள், 5 பேட்டரிகள் மற்றும் 5 சிம் கார்டுகளை சிறைத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள புழல் காவல்துறையினர், கைதிகளுக்கு செல்போன்கள் எவ்வாறு கிடைத்தன என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். ஆசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலைகளுள் ஒன்றான புழல் சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதும் பின்னர் அவை சோதனையில் கைப்பற்றப்படுவதும் இது முதன்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com