பாதுகாப்பு இல்லாத இடத்தில் நண்பர்கள் தின கொண்டாட்டம்: மாணவர்கள் மீது புகார்

பாதுகாப்பு இல்லாத இடத்தில் நண்பர்கள் தின கொண்டாட்டம்: மாணவர்கள் மீது புகார்

பாதுகாப்பு இல்லாத இடத்தில் நண்பர்கள் தின கொண்டாட்டம்: மாணவர்கள் மீது புகார்
Published on

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாதுகாப்பு இல்லாத இடத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் கேக் வெட்டி நண்பர்கள் தினம் கொண்டாடியதாக புகார் எழுந்துள்ளது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியில் கலை அறிவியல் கல்லூரி செய்யல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்டம் முழுவதும் கல்லூரி பேருந்து இயக்கப்படுகிறது. இதன் மூலமாக ஏராளமான மாணவர்கள் நாள் தோறும் கல்லூரிக்கு சென்றுவருகின்றனர். இந்த நிலையில் மாணவ, மாணவிகள் செல்லும் கல்லூரி வாகனம் மாணவர்கள் இறங்கும் இடத்தை தவிர வேறு எங்கும் வழியில் நிறுத்தக்கூடாது என்ற விதி நடைமுறையில் உள்ளது. அதனை மதிக்காமல் இன்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி வாகனம் ஒன்று ஆள் நடமாட்டமே இல்லாத பாதுகாப்பற்ற இடத்தில் நின்றிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு சென்று விசாரித்த போது நண்பர்கள் தினம் கொண்டாட இவ்வாறு பேருந்து சட்டவிரோதமாக இப்பகுதியில் வந்து நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com