தீபாவளி போனஸ் தராத கடைமுன் குப்பைகளை கொட்டிய தூய்மை பணியாளர்-வெளியானது சிசிடிவி காட்சிகள்!

தீபாவளி போனஸ் தராத கடைமுன் குப்பைகளை கொட்டிய தூய்மை பணியாளர்-வெளியானது சிசிடிவி காட்சிகள்!
தீபாவளி போனஸ் தராத கடைமுன் குப்பைகளை கொட்டிய தூய்மை பணியாளர்-வெளியானது சிசிடிவி காட்சிகள்!

கோவையில் தீபாவளி போனஸ் தராத கடையின் முன்பு மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் குப்பைகளை கொட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் உள்ள தனியார் எல்.இ.டி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவரிடம், மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஜேம்ஸ் “20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன்” என அந்த தூய்மை பணியாளரிடம் கூறியுள்ளார்.

ஆனால், அதன் பின்னரும், அந்த தூய்மை பணியாளர் தொடர்ந்து ரூ. 500 கேட்டு தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி சுகாதார பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து, கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கொடுக்காத கடை மற்றும் வீடுகள் முன்பு, சுகாதாரப் பணியாளர் சிலர் குப்பைகளைக் கொட்டிவிட்டு செல்வது வாடிக்கையாகி விட்டது என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். தனியார் நிர்வாகங்களிடம் வலுக்கட்டாயமாக போனஸ் கேட்கும் ஒரு சில தூய்மை பணியாளர்களால், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதால், தவறு செய்பவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com