கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு - சிசிடிவி காட்சி

கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு - சிசிடிவி காட்சி
கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு - சிசிடிவி காட்சி


வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மநபர் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த தம்பதி மருத்துவர் ஆதீஸ்வரன் மற்றும் வேலு மயில். நேற்று காலை வழக்கம் போல் வேலு மயில் வீட்டு முற்றத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அவர் அணிந்திருந்த 11 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.


இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புதூர் காவல்நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்தனர். அதில் திருடன் ஜெயினை பறித்துவிட்டுத் தப்பி ஓடும் காட்சிகளும், தப்பி ஓடும் மர்ம நபரை இரு சக்கர வாகனத்தில் மற்றொரு நபர் அழைத்துச் செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தற்போது மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com