2ஜி வழக்கில் சிபிஐ மேல்‌முறையீடு செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

2ஜி வழக்கில் சிபிஐ மேல்‌முறையீடு செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
2ஜி வழக்கில் சிபிஐ மேல்‌முறையீடு செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ மேல்‌முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.‌ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்‌.

நாகை மாவட்டம் கீழவெண்மணியில் 44 பேர் எரித்துக்கொல்லப்பட்டதன் 49வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அங்கு அஞ்சலி செலுத்தினார். அந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் சவுந்தர்ராஜன், பாலகிருஷ்ணன், உள்ளிட்டோரும் கலந்து கொண்டு, உயிர்நீத்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ மேல்‌முறையீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com