நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை : உதித்சூர்யா தந்தை ஒப்புதல் 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை : உதித்சூர்யா தந்தை ஒப்புதல் 
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை : உதித்சூர்யா தந்தை ஒப்புதல் 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை என உதித் சூர்யா தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதித் சூர்யாவை தேடி வந்தனர். 

இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் உதித் சூர்யா தரப்பு மனுத் தாக்கல் செய்தது. ஆனால் மாணவர் உதித் சூர்யா சிபிசிஐடி முன்பு ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து திருப்பதியில் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

குற்றம் சாட்டப்பட்ட உதித் சூர்யா, அவரது தாய் கயல்விழி தந்தை வெங்கடேசன் ஆகிய மூன்று பேரையும் சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் தேனி சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா தந்தை ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com