காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
பிலிகுண்டுலுவுக்கு நேற்று வரை வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 19,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் மழைநீரால் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், தண்ணீர் கலங்கலாக வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. டெல்டா மாவட்டங்கள் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.