காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்: தமிழக அரசு மனு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்: தமிழக அரசு மனு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்: தமிழக அரசு மனு
Published on

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று இடைக்கால மனுவை தாக்கல் செய்து ள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் வாரியம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, நாளை வருகிறது. கடந்த விசாரணையின்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் கர்நாடக அரசு மீது கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் நீதிமன்றம் கூறியது. 

இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று தெரிவித்துள்ளது. போதிய மழை இல்லாததால் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. 

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. அதில் மே இறுதிவரை செல்லாமல் உடனடியாக 4 டிம்.சி தண்ணீரை திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com