மதமாற்றத்தை எதிர்த்ததால் கேட்டரிங் ஏஜென்ட் வெட்டிக் கொலை எனப் புகார்

மதமாற்றத்தை எதிர்த்ததால் கேட்டரிங் ஏஜென்ட் வெட்டிக் கொலை எனப் புகார்
மதமாற்றத்தை எதிர்த்ததால் கேட்டரிங் ஏஜென்ட் வெட்டிக் கொலை எனப் புகார்

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் கேட்டரிங் ஏஜென்ட் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் கேட்டரிங் ஏஜென்ட்டாக இருப்பவர் ராமலிங்கம். இவர் தூண்டில் விநாயகன் பேட்டை என்ற இடத்திற்குச் சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் ராமலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

முன்னதாக பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் மதமாற்றம் செய்ததை எதிர்த்து ஒரு குறிப்பிட்ட மதத்தினரிடம் ராமலிங்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தக் கொலை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமலிங்கம் கொலை தொடர்பாக அவரது மகன் காவல் துறையில் அளித்துள்ள புகாரில், மதமாற்றம் செய்வதை தட்டிக்கேட்டதால் தனது தந்தை கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com