சீனக்கப்பலில் சென்னை வந்த பூனையை திருப்பி அனுப்ப பீட்டா எதிர்ப்பு!

சீனக்கப்பலில் சென்னை வந்த பூனையை திருப்பி அனுப்ப பீட்டா எதிர்ப்பு!
சீனக்கப்பலில் சென்னை வந்த பூனையை திருப்பி அனுப்ப பீட்டா எதிர்ப்பு!

சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்த பூனைக்கு கொரோனா இருப்பதாக எழுந்துள்ள சந்தேகம் புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ள மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் அண்டை நாடுகளுக்கு இடையே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்தது பீதியை ஏற்படுத்தியது. துறைமுகத்தின் நுழைவு வாயில் வழியாக வந்த கண்டெய்னரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, விளையாட்டு பொம்மைகள் அதிகம் நிரம்பிய கண்டெய்னர் ஒன்றில் விலங்குகள் பிரத்யேகமாக கொண்டுவரப்படும் கூண்டில் பூனை இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பூனை எங்கிருந்து வந்ததோ அங்ககேயே திருப்பி அனுப்பிவிட சுகாதாரத்துறை அதிகாரிகள் துறைமுக நிர்வாகத்தை அறிவுறுத்தினர். ஆனால் பூனையை அனுப்பக் கூடாது என விலங்குகள் நல அமைப்பான பீட்டா துறைமுக நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

செல்லப்பிராணிகளால் கொரோனா பாதிப்பு வராது என அமெரிக்க கால்நடை பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலை பீட்டா சுட்டிக்காட்டுகிறது. மேலும் 20 நாட்களாக உணவு, நீரின்றி கூண்டுக்குள் அடைந்துள்ள பூனை இறக்கவும் நேரிடலாம் என பீட்டா எச்சரித்துள்ளது. சீனாவிலிருந்து வந்த கப்பல் பல நாட்டு துறைமுகங்களை கடந்து வந்துள்ளதாகவும் எனவே அதில் ஏதாவது ஒன்றிலிருந்து கூட பூனை கப்பலுக்குள் வந்திருக்கலாம் என்றும் பீட்டா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com