ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்டு வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது விரும்பத்தகாத நிகழ்வுகளான காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.