\
ஆன்லைன் தேர்வு கோரி போராடிய கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து - தமிழக அரசு

ஆன்லைன் தேர்வு கோரி போராடிய கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து - தமிழக அரசு

ஆன்லைன் தேர்வு கோரி போராடிய கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து - தமிழக அரசு
Published on
ஆன்லைன் தேர்வு கோரி போராட்டங்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகளின் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது, மதுரையில் 9 வழக்குகள், கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை மற்றும் திருச்சியில் தலா ஒன்று என மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அந்த வழக்குகள் அனைத்தையும் கைவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், அந்த 12 வழக்குகளிலும் தமிழ்நாடு காவல் துறையினரால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com