‘ரூட் தல’ பிரச்னை - பொது அமைதியை சீர்குலைத்ததாக 58 மாணவர்கள் மீது வழக்கு

‘ரூட் தல’ பிரச்னை - பொது அமைதியை சீர்குலைத்ததாக 58 மாணவர்கள் மீது வழக்கு
‘ரூட் தல’ பிரச்னை - பொது அமைதியை சீர்குலைத்ததாக 58 மாணவர்கள் மீது வழக்கு

சென்னையில் ரூட் தல என்ற பெயரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 58 மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்தில் 21 பேர், மேற்கு மண்டலத்தில் 36 பேர், கிழக்கில் ஒரு மாணவர் என 58 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 107இன் படி மாணவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது இனி கருணை காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். 

வழக்கமாக தேர்தல் காலங்களில் ரவுடிகளிடம் இதுபோல் 107 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். அதேபோல், மாணவர்களிடம் தற்போது செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி மாணவர்கள் தவறு செய்யும் பட்சத்தில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் நேரடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com