"85% இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் தலையிட முடியாது"

"85% இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் தலையிட முடியாது"

"85% இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் தலையிட முடியாது"
Published on

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித ஒதுக்கீடு வழங்கியது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 
சிபிஎஸ்இ மாணவர்கள் சிலர் ‌சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு 15 சதவிகித ஒதுக்கீடு என்பதன் மூலம் மொத்தம் உள்ள 2500 இடங்களில் தங்களுக்கு 319 மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், ஒரே தேர்வு என்ற முறை வந்த பிறகு மாநில வழி கல்வி, மத்திய வழி கல்வி என பிரித்து பார்க்க கூடாது எனவும் கூறியிருந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 85 சதவிகிதம் என்ற இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பதில மனு தாக்கல் செய்தார். அதில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதே கோரிக்கைகளுடன் மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில், உயர் நீதிமன்றத்தையே அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்த மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளும் நாளை விசாரணைக்கு வரவுள்ளன.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com