தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு - விஜயபாஸ்கர்மீது வழக்குப்பதிவு

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு - விஜயபாஸ்கர்மீது வழக்குப்பதிவு
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு - விஜயபாஸ்கர்மீது வழக்குப்பதிவு

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தொடர்பான 13 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மஞ்சக்கரை கிராமத்தில் செயல்பட்டு வரும் வேல்ஸ் மெடிக்கல் காலேஜ் தேசிய மருத்துவ ஆணையம் விதிகளை மீறி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முறைகேடாக அனுமதி வழங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழகம் முழுவதும் 13 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி தரமான மருத்துவ கல்லூரிகள் நாடு முழுவதும் துவங்கப்பட வேண்டும். தகுதியான மருத்துவ பேராசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு தரமான மருத்துவ கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கில், 2020 ஆம் ஆண்டு பல்வேறு விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டன. அதன்படி குறைந்தபட்சம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவங்கப்படும்போது 300 படுக்கை வசதிகளும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து வசதிகளுடன் முழுமையாக செயல்பட்டு இருக்க வேண்டும் என்ற தகுதி உள்ளது.

இது போன்ற அடிப்படைத் தகுதி மற்றும் ஆய்வு மேற்கொண்ட பிறகுதான் மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக எசன்ஸ்யலிட்டி சர்டிபிகேட் என்ற அனுமதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் ஆய்வுசெய்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதியை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முறைகேடாக வழங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதுபோன்று அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகு மருத்துவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.

வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவரான ஐசரி கணேஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு திருவள்ளூரில் வேல்ஸ் மெடிக்கல் காலேஜ் 150 மாணவர் சீட்டுகளுடன் நடத்துவது தொடர்பாக அனுமதி கேட்டு தமிழக சுகாதாரத் துறைக்கு விண்ணப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 2020 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்திலிருந்து மருத்துவ கல்வியை இயக்குநரத்திற்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 150 மாணவர்கள் படிப்பதற்கு ஏற்றார் போல் தேசிய மருத்துவ ஆணைய விதிப்படி உள்ளதா என ஆய்வு செய்யுமாறு மருத்துவக் கல்வி இயக்குநரத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.

இதன் அடிப்படையில் வேல்ஸ் மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்வதற்கு சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் நான்கு மருத்துவர் களை மருத்துவக் கல்வி இயக்குனரகம் நியமித்தது. சேலம் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த பாலாஜி நாதன், சுஜாதா,குமாரவேல், மனோகர் ஆகிய நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு வேல்ஸ் மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டது. அந்த ஆய்வு மேற்கொள்ளும் போது மருத்துவர் குமாரவேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவர் வசந்தகுமார் ஆய்வு குழுவில் இடம் பெற்றார்.

இதன் அடிப்படையில் நான்கு பேர் கொண்ட மருத்துவ குழுவில் மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டது. குறிப்பாக ரத்த வங்கி செயல்படுவது நில ஆவணங்கள், ஆப்ரேஷன் தியேட்டர்கள், வெளி நோயாளிகள் தேவையான வசதி, படுக்கை வசதி, கல்லூரியில் உட்கட்டுமான வசதி, 150 மருத்துவ மாணவர்கள் படிப்பதற்கான வசதி உள்ளிட்டவற்றை மருத்துவ குழு ஆய்வு செய்து கடந்த நவம்பர் 16ஆம் தேதி மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்,மற்றொரு மருத்துவ டாக்டர்கள் குழு ஒன்று சோதனை மேற்கொண்டது.

இந்த திடீர் ஆய்வின் போது வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் மற்றும் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என்பது அம்பலமானது. மேலும் தேசிய மருத்துவமனையை ஆணைய விதிகளை முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் அறிக்கையில் மருத்துவ குழுவால் சமர்ப்பிக்கப்பட்டது. விதிப்படி 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில், குறைந்தபட்சம் 60% நோயாளிகள் சிகிச்சை பெற்று முழுமையாக இரண்டு வருடம் செயல்பட வேண்டும் என்ற தேசிய மருத்துவமனை ஆணைய விதிகள் மீறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

உதவி இயக்குனர் நகர்ப்புற திட்ட துறை அதிகாரிகள் ஜூன் மாதம் 2020 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய விதிப்படி கட்டுமானம் இன்னும் முழுமை பெறவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நவம்பர் 2020 ஆம் ஆண்டு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுப்பிய மருத்துவ குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் டீன் சீனிவாச ராஜ் 650 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் 270 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக அதிகப்படியாக காட்டி தவறான அறிக்கை கொடுத்தது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் தவறான அறிக்கையை கொடுத்து முறைகேட்டில் உடனடியாக வேல்ஸ் மருத்துவக் கல்லூரியின் டீன் சீனிவாசராஜ், மருத்துவ குழுவோடு சேர்ந்து எசன்ஸியலிட்டி சர்டிபிகேட் எனப்படும் அத்யாவிசிய வசதிகள் தொடர்பான சான்றிதழ் பெற மூறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது அப்போது சுகாதார துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி ,வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வசதிகள் தொடர்பான விவகாரத்தில் பலவற்றை மறைத்து நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு புதிய மருத்துவக் கல்லூரி துவங்கலாம் என்பதற்கான அறிக்கை அளித்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த நான்கு மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையில் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சில குறைபாடுகளை பெயரளவில் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு நவம்பர் 24ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு சுகாதாரத் துறை செயலாளர் தரப்பில் குறைபாடுகளை நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாள் கழித்து எந்த வித குறைபாடுகளையும் சரி செய்யாமல் பொய்யான அறிக்கையை மருத்துவக் கல்லூரி சமர்ப்பித்ததும் விசாரணையில் அம்பலமானது.

இவ்வாறு வேல்ஸ் மருத்துவர் கல்லூரி மற்றும் மருத்துவமனை அனுமதி சான்று வழங்குவதற்கு மருத்துவ இயக்குனரகம் நியமித்த நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவை தன் அதிகாரத்தை பயன்படுத்தி தவறான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வைத்து அனுமதி வழங்கியது தெரியவந்துள்ளது. இதற்காக வேல்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மூலம் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு பணமதிப்பு லாபம் அடைந்துள்ளதாக விசாரணையில் தெரியாமல் உள்ளது.

விசாரணையில் அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாச ராஜ் மருத்துவ கல்லூரியை ஆய்வு மேற்கொண்ட 4 அரசு மருத்துவர்கள் குழு என ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com