நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்புதிய தலைமுறை

ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. நயினார் நாகேந்திரன் மீது ED விசாரணை கோரி வழக்கு!

சிபிசிஐடி ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதால் அமலாக்கத் துறை விசாரணை அவசியம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
Published on
Summary

2024 மக்களவை தேர்தலின் போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட திமுக எம்.பி. கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும், அரசியல் காரணங்களால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தலின்போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக மாநிலங்களவை எம்.பி. கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்Pt web

இது தொடர்பாக சிபிசிஐடி ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதால் அமலாக்கத் துறை விசாரணை அவசியம் என மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களால் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தாம்பரத்தில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், அவரது தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

3  persons arrested in connection with the incident
3 persons arrested in connection with the incident web

இந்நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக மூல வழக்கு பதிவு செய்தும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

what reason of bjp replaces organisational general secretary keshava vinayagam
கேசவ விநாயகம்எக்ஸ் தளம்

இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால் வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனும், கேசவ விநாயகமும் பாஜகவை சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com